காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற அத்திவரதர் வைபவத்தில் ரூ.9.89 கோடி காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 48 நாட்கள் நடைபெற்ற வைபவத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ.9,89,71,731 வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.