பதிவு செய்த நாள்
21
ஆக
2019
11:08
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவிலில், குடமுழுக்கு முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு யாக வேள்வி பூஜையும், அபிஷேக அலங்கார பூஜையில் நடந்தன.மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில், மிகவும் பழமையான மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்தாண்டு நடந்தது. குடமுழுக்கு முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, சுப்ரமணிய சுவாமி கோவில் அருகேவுள்ள பவானி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்களை எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின், சிறப்பு யாக வேள்வியும், கணபதி ஹோமத்தையும், ஜோதி வேலவன் நடத்தினார். பின்பு அம்மனுக்கு அலங்கார பூஜையும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் விழாக்குழு நிர்வாகிகள் வெள்ளிங்கிரி, பாலன், ஓடந்துறை ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், மணி, தங்கவேலு உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.