உடுமலை: உடுமலை மலையாண்டிபட்டணம் சித்த நாதேஸ்வரர் கோவிலில் நடந்த, திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மலையாண்டிபட்டணத்தில் உள்ள அழகாம்பிகை சமேத சித்த நாதேஸ்வரர் கோவிலில், ஆவணி மாத பிறப்பையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
இரண்டு நாட்கள் விழாவில் முதல், நாள், அம்பாள் அழைப்பு மற்றும் சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது.மறுநாள், அழகாம்பிகை அம்மன், சித்த நாதேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம், சிறப்பு பூஜைகளுடன் நடந்தது. திருமண கோலத்தில், சிறப்பு அலங்காரத்துடன் சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது.மாலையில், அழகாம்பிகை அம்மன் சமேத சித்தநாதேஸ்வரர் சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.