பதிவு செய்த நாள்
22
ஆக
2019
11:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஒரு கோடியே, 32 லட்சத்து, 69 ஆயிரத்து, 315 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்து, உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். அதன்படி, ஆடி மாத பவுர்ணமி கடந்த வாரம் முடிந்த நிலையில், நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில், உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், ஒரு கோடியே, 32 லட்சத்து, 69 ஆயிரத்து, 315 ரூபாய், 145 கிராம் தங்கம், 1,810 கிராம் வெள்ளி நகைகள் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.