பதிவு செய்த நாள்
22
ஆக
2019
11:08
காரமடை: காரமடை சந்தான வேணுகோபாலசுவாமி கோவிலில், ஸ்ரீ ஜெயந்தி என்னும் கண்ணன் பிறந்த நாள், ஆக., 24 மற்றும் 25ம் தேதியில் நடக்கிறது. பழமை வாய்ந்த காரமடை ரங்கநாதர் கோவிலின் உபகோவிலான. ஸ்ரீ சந்தான வேணுகோபாலசுவாமி கோவிலில். ஸ்ரீஜெயந்தி வைபவம் ஆக.,24 மற்றும் 25ம்தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
ஆக., 24 அன்று காலை விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி, மூலவருக்கு திருமஞ்சனம், காலசந்தி பூஜை , தொடர்ந்து புன்னியாகவசனம், விஷ்வக்சேனர் பூஜை , நவகலச ஆவாகனம், செய்யபடுகிறது. பாமா, ருக்மணி சமேத சந்தான வேணுகோபாலசுவாமி மற்றும், உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், தேன், நெய், இளநீர், மஞ்சள், சந்தனம், மற்றும் மூலிகை திரவியங்களால் ஸ்னபன திருமஞ்சனம் நடக்கிறது. இதையடுத்து கண்ணனின் அவதாரச் சிறப்பை கூறும், திவ்யப் பிரபந்தத்தில், பெரியாழ்வாரின் திருமொழி பாசுரஙகள் ஸ்தலத்தார்களால் சேவித்தும். பின்னர் சாற்றுமுறை, பிரசாத விநியோகம் வழங்கப்படும். மறு நாள் காலையில் பாமா, ருக்மணி சமேத சந்தான வேணுகோபாலன், மங்கள வாத்தியங்கள் முழங்க நான்கு மாட வீதிகளில் புறப்பாடும், இரவு உரியடி உற்சவமும், திருவீதி புறப்பாடும் சாற்றுமுறை விழாவோடு பூர்த்தியடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியர் செய்து வருகின்றனர்.