விநாயகர் சதுர்த்தி வழிபாடு சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2019 12:08
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு 10 அடி உயரத்துக்கு மேல் சிலைகளை வைக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சிவகங்கையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தியின் போது மேற் கொள் ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலை மையில் நடந்தது. மாவட்ட எஸ்.பி., ரோஹித்நாதன் ’முன்னிலை வகித்தார். மாவட்ட அளவி லான விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியாளர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மாவட்ட நிர் வாகம் சார்பாக கீழ்கண்ட வழிகாட்டுதல் தெரிவிக்கப்பட்டது.
தற்காலிக விநாயகர் சிலை வைப்பதற்கு அந்தந்த வருவாய் கோட்டாட்சியரிடம் உரிய ஆவ ணங்களுடன் முறையான அனுமதி வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிக் கப்படாத வகையில் விநாயகர் சிலைகளை களிமண்ணால் மட்டுமே செய்ய வேண்டும், பீடத் தோடு சேர்ந்த சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது, சிலை வைக்குமிடத் தில் காலை, மாலை தலா இரண்டு மணி நேரம் மட்டுமே பெட்டி வடிவ ஒலிபெருக்கியை பயன் படுத்த வேண்டும், சிலைகளை கண்காணிக்க இரண்டு சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண் டும், அரசு அனுமதிக்கும் இடத்திலேயே சிலைகளை வைக்க வேண்டும், 5 நாட்களுக் குள் சிலைகளை கரைத்து விடவேண்டும், சிலைகளை கரைப்பதற்கு முன்னும், கரைத்த பின்னும் நீர்நிலையில் உள்ள நீரை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும், உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் கூறப்பட்டன.
இக்கூட்டத்தில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, கூடுதல் துணை கண் காணிப்பாளர் மங்களேஸ்வரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.