பாண்டுரங்க பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2019 12:08
புதுச்சத்திரம்: பெரியப்பட்டு ரகுமாயி சமேத பாண்டுரங்க பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ணன் கோவர்த்தனகிரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
விழாவையொட்டி, கடந்த 20ம் தேதி காலை 6.00 மணிக்கு சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, 8.00 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை,10.00 மணிக்கு மூலவர் திருமஞ்சனம் நடந்தது. 21 ம் தேதி மாலை 6.00 மணிக்கு திருமொழி 1ம் பத்து சேவை, 7.30 மணிக்கு ஷோடஷ உபசார பூஜை, காளிங்க நர்த்தன அலங்காரம் நடந்தது.22 ம் தேதி காலை 6.00 மணிக்கு சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, மாலை 5.00 மணிக்கு திருமொழி 2 ம் பத்து சேவை, இரவு 8.00 மணிக்கு கிருஷ்ணனுக்கு கோவர்த்தனகிரி அலங்காரம் செய்து, தீபாராதனை மற்றும் வீதியுலா நடந்தது.