திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கிருஷ்ண ஜெயந்தி பிரம்மோற்சவ விழா துவங்கியது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள வேணுகோபால சுவாமிக்கு பத்து நாட்கள் நடைபெறும் ஸ்ரீ ஜெயந்தி பிரம்மோற்சவ விழா இன்று துவங்கியது.
விழாவின் முதல்நாளான இன்று அதிகாலை 5:00 மணிக்கு பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:30 மணிக்கு நித்திய பூஜைகள், 7:00 மணிக்கு ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலன் முத்துப்பந்தல் விமானத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. பகல் 12:00 மணிக்கு வேணுகோபாலன் சன்னதியில், ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலனுக்கு விசேஷ திருமஞ்சனம், சேவை சாற்றுமறை நடந்தது. ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற கிருஷ்ணஜெயந்தி பிரம்மோற்சவ விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.