Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை நகரில், கிருஷ்ண ஜெயந்தி விழா காஞ்சியில் விநாயகர் சதுர்த்தி விழா காஞ்சியில் விநாயகர் சதுர்த்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
01:08

திண்டுக்கல் : திண்டுக்கல் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.திண்டுக்கல் மலையடிவார சீனிவாச பெருமாள், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெரு மாள், மேட்டுராஜகாபட்டி கிருஷ்ண கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

குழந்தைகள் கிருஷ்ணர், ராதை போல் வேடமணிந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு வெண்ணெய் பிரசாதமாக வழங்கப்பட்டது. தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெரு மாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆறு கால பூஜைகள் நடந்தது. ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் உள்ள பைரவருக்கும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

* பழநி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பழநி முருகன்கோயில் உபகோயிலான வேணு கோபால பெருமாள் கோயிலில் பால், பழங்கள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட் களில் பெருமாளுக்கு அபிஷேகமும், கிருஷ்ணர் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.

பொரி, அவல், வெண்ணெய், லட்டு நைவேத்யம் படைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. சிறுவர், சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கோயிலை வலம் வந்தனர்.

* பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள்கோயில், லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில்களில் நடந்த பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார் செய்தனர்.விஸ்வ இந்துபரிஷத் சார்பில் நுாற்றுக் கணக்கானோர் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்தனர். இந்நிகழ்ச்சிக்கு பழநி நகரதலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.

இணைச்செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில அமைப்பாளர் சரவணகார்த்திக், ஆர்.எஸ்.எஸ்., மண்டல தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இணை அமைப் பாளர் ரகுநாத், பா.ஜ., பொதுச்செயலாளர் கனகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். செம்பட்டி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு செம்பட்டி கோதண்டராமர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு பாலாபிஷேகத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

* சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்ஸவர் ராமருக்கு, வேணுகோபாலசுவாமி அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவத்தில் ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar