பதிவு செய்த நாள்
24
ஆக
2019
01:08
திண்டுக்கல் : திண்டுக்கல் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.திண்டுக்கல் மலையடிவார சீனிவாச பெருமாள், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெரு மாள், மேட்டுராஜகாபட்டி கிருஷ்ண கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
குழந்தைகள் கிருஷ்ணர், ராதை போல் வேடமணிந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு வெண்ணெய் பிரசாதமாக வழங்கப்பட்டது. தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெரு மாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆறு கால பூஜைகள் நடந்தது. ரயிலடி சித்தி விநாயகர் கோயிலில் உள்ள பைரவருக்கும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
* பழநி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பழநி முருகன்கோயில் உபகோயிலான வேணு கோபால பெருமாள் கோயிலில் பால், பழங்கள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட் களில் பெருமாளுக்கு அபிஷேகமும், கிருஷ்ணர் அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது.
பொரி, அவல், வெண்ணெய், லட்டு நைவேத்யம் படைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. சிறுவர், சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு கோயிலை வலம் வந்தனர்.
* பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள்கோயில், லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில்களில் நடந்த பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார் செய்தனர்.விஸ்வ இந்துபரிஷத் சார்பில் நுாற்றுக் கணக்கானோர் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்தனர். இந்நிகழ்ச்சிக்கு பழநி நகரதலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
இணைச்செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில அமைப்பாளர் சரவணகார்த்திக், ஆர்.எஸ்.எஸ்., மண்டல தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இணை அமைப் பாளர் ரகுநாத், பா.ஜ., பொதுச்செயலாளர் கனகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். செம்பட்டி: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு செம்பட்டி கோதண்டராமர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு பாலாபிஷேகத்துடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
* சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்ஸவர் ராமருக்கு, வேணுகோபாலசுவாமி அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது.