பதிவு செய்த நாள்
26
ஆக
2019
12:08
உடுமலை: உடுமலை மாணிக்க விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.உடுமலை, ராமசாமி நகரில், விநாயகா லே அவுட், மாதா லே அவுட், ஆறுமுகம் லே அவுட், சங்கரன் லே அவுட், ரஹீம் லே அவுட்டில், மாணிக்க விநாயகர் கோவில் உள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் மாலை, 5:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, திருமகள் மற்றும் நிலத்தேவர் வழிபாட்டுடன் துவங்கியது.தொடர்ந்து, முளைப்பாலிகை வைத்து, காப்பு அணிவித்து, முதற்கால யாக வேள்வி, நவகோள் வேள்வி, மலர் அர்ச்சனை வழிபாடு, திருமுறை விண்ணப்ப வழிபாடுகள் நடந்தன. இரவில், சுவாமிகளுக்கு எண்வகை மருந்து சாற்றி நிலைப்படுத்தப்பட்டது. நேற்று காலை, 6:30 மணிக்கு, சுவாமிகளுக்கு, 16 திரவியங்களில் அபிஷேகம் செய்து, காப்பு அணிவிக்கப்பட்டது. காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, நவகோள் வேள்வி, அருட்காலயேற்றல், நாடிசந்தானம், மலர் அர்ச்சனை வழிபாடு மற்றும் பேரொளி வழிபாடு நடந்தது. காலை, 8:15 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு தீர்த்தங்கள் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, மகா அபிஷேகத்துடன் அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மண்டல பூஜை, நாள்தோறும், மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது.