நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என எதிர் பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்பு கூடாது என்கிறார் நாயகம். ஒருவருக்கொருவர் அன்பளிப்பை பரிமாறலாம். மற்றபடி பணம் கொடுத்து உதவுதல், உடலுழைப்பை எதிர்பார்த்தல் கூடாது என்பது அவரது கருத்து. இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றை உதாரணமாக காட்டுகிறார். ஒரு நபர் தன் நண்பரைக் காண போய்க் கொண்டிருந்தார். அவரிடம் பேச்சு கொடுக்கும்படி வானவரை அனுப்பினார் இறைவன்.
வானவர்: எங்கு செல்கிறீர்கள்?
மனிதர்: நண்பரைச் சந்திக்கச் செல்கிறேன்.
வானவர்: ஏதேனும் உதவி கேட்டா?
மனிதர்: இல்லை, அவர் மீது நான் அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன். அதனால் செல்கிறேன்.
வானவர்: அன்பால் தேடிச் செல்வதால், இறைவன் உங்களுக்கு சொர்க்கத்தை நிச்சயித்து விட்டார். இந்த செய்தியை உங்களிடம் சொல்லும்படியும் எனக்கு கட்டளையிட்டார். இந்த உரையாடலுக்கு பிறகு வானவர் புறப்பட்டார். நண்பர்களிடம் உதவி கேட்காவிட்டால், சொர்க்கத்தில் இடம் இருக்கிறது. இனியாவது நண்பர்களிடம் பணம் கேட்டு நச்சரிக்காதீர்கள்.