போலந்து நாட்டில் ஹோபட்ஸ் கெய்ம் என்ற துறவி வாழ்ந்தார். இவரைப் பார்க்க ஒருவர் வந்தார். துறவியின் அறையில் ஒரு சணல் கட்டில், மேஜை, நாற்காலி, இரண்டு புத்தகங்கள் தவிர வேறு ஏதுமில்லை. “துறவியே! உங்களிடம் எந்தப் பொருளும் இல்லையே! இதைக் கொண்டு எப்படி வாழ்வீர்கள்?” என்றார் அன்பர். “உங்களிடம் கூடத் தான் ஏதுமில்லை. நீங்கள் சமாளிக்கவில்லையா?” என்றார் துறவி. ”எல்லாப்பொருளும் என் ஊரில் இருக்கிறது. கொஞ்ச நாள் இங்கு வந்து போவதற்கு அத்தனை பொருட்களும் எடுத்து வர தேவையில்லையே!” என்றார் அன்பர். “உங்களைப் போலத் தான் நானும் இந்த உலகில் சிலகாலம் வந்து போகிறேன். அத்தனை பொருளும் எனக்கு எதற்கு?” என்று கேட்டார். அன்பரால் மறுக்க முடியவில்லை. ’வாழ்க்கை என்பது சற்றுநேரம் தோன்றி மறையும் புகை. மனிதனின் வாழ்நாட்கள் புற்களுக்கு ஒப்பானவை. வயலில் உள்ள பூவைப் போல அவன் செழிக்கிறான். காற்று அதன் மீது வீசிப் போனதும், பூ இல்லாமல் போய் விடுகிறது’.