சிலர் குதர்க்கம் பேசுவார்கள். மது குடிப்பவனிடம், ”இது உடலுக்கு தீங்கானது எனத் தெரிந்தும் ஏன் குடிக்கிறாய்?” என்றால், “அப்படியானால் கடவுள் இதை ஏன் படைக்க வேண்டும்?” எனக் கேட்பான். ”சரி... கடவுள் பாவச்செயல் செய்யாதே என கூறியுள்ளாரே... ஏன் செய்கிறாய்?” என்றால் பதில் சொல்ல முடியாமல் திணறுவான். நல்லதும் கெட்டதும் கலந்ததே இந்த உலகம். வானம், பூமி, மரங்கள், செடிகள் என நல்லதை எல்லாம் கடவுள் படைத்தார். மது, சிகரெட், போதை பொருட்கள் போன்றவை மனிதனால் உருவாக்கப்பட்டவை. கடவுளை மதிக்காத காரணத்தால் ஒழுக்கத்தை இழந்து தீய பழக்கங்களுக்கு ஆளாகிறான். இதை உணராவிட்டால் உடல்நலம் கெட்டு விரைவில் மரணத்திற்கு ஆளாவான். ’பாவத்தின் சம்பளம் மரணம்’ என்னும் வசனம் தீய வழியில் நடப்பவர்கள் முடிவில் மரணத்தைச் சந்திப்பர் என்பதை உறுதிப்படுத்துகிறது.