விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் சோதனைச்சாலையில் ஒருமுறை தீப்பற்றியது. எடிசன் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது மகன் கண்ணீர் வழிய, தந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டான். மகனைத் தேற்றிய அவர், “ஓடிப் போய் அம்மாவை கூட்டி வா. அவள் வாழ்நாளில் இனி இப்படி ஒரு நிகழ்வைக் காண முடியாது,” என்றார். மகனும் அழைத்து வந்தான். “உங்கள் கண்டுபிடிப்பெல்லாம் அழிந்து போனதே! உங்கள் ஆய்வு குறிப்புகளும் எரிந்து போனதே! பல ஆயிரம் பணமும் நஷ்டமாயிற்றே!” என மனைவி அழுதாள்.
”ஒருவேளை என் ஆய்வு குறிப்புகளில் தவறு இருந்ததோ என்னவோ! அதனால் தான் என் புகழை அழியாமல் காக்க ஆண்டவர் இப்படி ஒரு செயலை நிகழ்த்தியிருக்கிறார். நஷ்டத்திலும் லாபம் ஒளிந்திருக்கிறது என்று இதைத் தான் சொல்ல வேண்டும். போனது போகட்டும். என் ஆய்வை இனி முதலில் இருந்து துவக்குகிறேன்”என்று சொல்லி தேற்றினார். அவரது மனைவியும் அமைதியானாள். துன்பம் கூட நம் நன்மைக்காக ஆண்டவரால் தரப்பட்டது என்பதை உணர வேண்டும். தொந்தி கணபதியை சமஸ்கிருதத்தில் ’டுண்டி கணபதி’ என்பர். காசியில் இருக்கும் ’டுண்டி ராஜகணபதி’ பிரசித்தமானவர். இதே பெயரில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இலங்கை செல்ல சேதுக்கரையில் பாலம் கட்டும் முன் ராமபிரான் இவரை வழிபட்டார்.