நாகர்கோவில் : ஓணம் பண்டிகையை ஒட்டி கேரளா மற்றும் எல்லை மாவட்டங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. தோவாளையில் நேற்று ஒரே நாளில் ஆயிரம் டன் பூ விற்பனை ஆனது.
மகாபலி சக்ரவர்த்தி ஆவணி மாதம் திருவோண நாளில் மக்களை காண வருவதாக ஐதீகம். அவ்வாறு வரும் மன்னரை வரவேற்று மக்கள் பாகுபாடுகள்மறந்து ஓணத்தை கொண்டாடுகின்றனர். ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி 10 நாட்கள் கொண்டாட்டம் நடைபெறும். ஓணம் அன்று புத்தாடை அணிந்து கோயில்களில் வழிபாடு நடத்துவது வழக்கம். அனைத்து கோயில்களிலும் மூலவருக்கு மஞ்சள் வண்ண ஓண பட்டு அணிவிக்கப்பட்டு வழிபாடு நடைபெறும்.கேரளத்தில் எல்லை மாவட்டங்களான குமரி, கோவையில் பண்டிகை உற்சாகம் களைகட்டியுள்ளது.
சபரிமலையில் இன்று ஓண சிறப்பு வழிபாடுகளுடன் பக்தர்களுக்கு ஓண விருந்தும் வழங்கப்படுகிறது.குமரி மாவட்ட முக்கியமலர் சந்தையான தோவாளையில் நேற்று ஒரே நாளில் ஆயிரம் டன் பூ விற்பனையானது.பிச்சி, மல்லி பூக்கள்கிலோ ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. கேரளாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளச்சேதம் காரணமாக ஓணம் கொண்டாடப்படவில்லை. திற்பரப்பு, பத்மனாபபுரம், கன்னியாகுமரி சுற்றுலா மையங்களில் மக்கள் குவிந்தனர்.