இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் ‘மூஹர்ரம்’ எனப்படும் மொகரம். ஜனநாயகத்தின் சிறப்பை மக்களாட்சியின் மாண்பைக் காப்பதற்காக நபிகள் நாயகத்தின் பேரர் ஹலரத் ஹுசைன் கர்பலா களத்தில் தன் இன்னுயிரை ஈந்த நிகழ்வு மொகரம் பத்தாம் நாளில் அரங்கேறியது.
நபிகளார் காலத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பு இருந்தே இம்மாதத்திற்கு எனத் தனிச் சிறப் பினை மக்கள் அளித்து வந்துள்ளனர். இந்நாளில் போர் புரிவதில்லை. யூதர்களும் இந்த நாளில் நோன்பு நோற்றுள்ளனர்.
பிர்அவ்னையும், அவனது கூட்டத்தாரையும் கடலில் மூழ்கடித்து, மூஸா அவர்களையும், அவர்களது மக்களையும் இறைவன் ஈடேற்றம் பெற வைத்த சிறப்பு இம்மாதத்திற்கு இருக் கிறது. மொகரம் பத்தாம் நாளில் மூஸா அவர்களும் நோன்பு நோற்றார்கள்.
“மொகரம் மாதத்தின் 9 மற்றும் 10ம் நாளில் நோன்பு நோற்பது அவசியம். மேலும் இந்த நாளிலே நோன்பு வைப்பது அதற்கு முன்னர் செய்திருக்கும் ஓராண்டிற்குரிய சிறிய பாவங் களை போக்கி விடும்” என்கிறார் நாயகம்.
இந்த நாளில் நாம் ஒவ்வொருவரும் குடும்பத்தினருக்கு அதிகப்படியாக செலவழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
மொகரம் மாதத்தின், பத்தாம் நாளில் ஹலரத் ஹூசைன் தியாக வரலாற்றை மக்களுக்கு விளக்கிட அறிஞர்களைக் கொண்ட கூட்டங்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் நடத்த வேண்டும். இந்த நல்ல நாளில் புதிய வாழ்வு மலர வேண்டும் என பிரார்த்திப்போம்.