காரைக்குடியில் மொகரத்தை முன்னிட்டு முஸ்லிம்கள் நேர்த்தி கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2019 01:09
காரைக்குடி: மொகரம் பண்டிகையை முன்னிட்டு காரைக்குடியில் முஸ்லிம்களின் ஒரு பிரிவினர் உடலில் பிளேடால் கீறி நேர்த்தி செலுத்தினர்.
காரைக்குடியில் வசிக்கும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் மொகரம் மாதமுதல் நாளில் ஐந்து விளக்கு அருகே எழுப்பிய கூடத்தில் பஞ்சத்தன் கொடியேற்றி தொடர்ந்து கருப்பு ஆடை அணிகின்றனர்.
10வது நாளில் மொகரத்தை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடத்தினர். படையல் போட்ட பிறகு துக்க பாடல்களுடன் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆவேசமாக வலது பக்க நெஞ்சில் ஓங்கி அடித்து தொழுகை கூடத்தை கொடிமரத்துடன் வலம் வந்தனர்.
சாம்பிராணி புகை போட்டு பெண்கள் கண்ணீர் சிந்திட, இளைஞர்கள், சிறுவர்கள் வெற்று உடம்பில் சிறிய பிளேடால் கீறி ரத்தம் சொட்ட, சொட்ட நேர்த்தி செலுத்தினர்.