பதிவு செய்த நாள்
11
செப்
2019
02:09
சென்னை:நவராத்திரியை முன்னிட்டு, அண்ணா சாலையில் உள்ள பூம்புகாரில், கொலு கண்காட்சி நடக்கிறது.
தமிழ்நாடு கைத்தறி தொழில் வளர்ச்சிக் கழகம் எனும் பூம்புகார் நிறுவனம், நவராத்திரி பண்டி கையை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனையக த்தில், கொலு கண்காட்சி, செப்., 6ல் துவங்கியது.தமிழக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், கண் காட்சியை துவக்கி வைத்தார். துறை முதன்மை செயலர், குமார் ஜெயந்த், பூம்புகார் மேலாண் இயக்குனர், சந்திரமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தமிழகம், புதுச்சேரி, ராஜஸ்தான், கோல்கட்டா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட, பல மாநிலங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள் உருவாக்கிய பொம்மைகள், கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
காகிதக் கூழ், பளிங்குத் துாள், சந்தன, நுாக்க, வெண் மரங்களில் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள், தசாவதாரம், ராமாயணம், கார்த்திகை பெண்கள், திருமண விருந்து போன்ற வடிவங்களில், பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன.கண்காட்சியில், 50 முதல், 1.25 லட்சம் ரூபாய் வரையிலான பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அக்., 12 வரை நடத்தப்படும் இக்கண்காட்சிக்கு, தினசரி காலை, 10:00 முதல், இரவு, 8:00 மணி வரை, பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.