பதிவு செய்த நாள்
11
செப்
2019
02:09
மேட்டுப்பாளையம்:குறிஞ்சி நகரில் புதிதாக கட்டிய குறிஞ்சி அம்மன் கோவில் கும்பாபிஷே கம் இன்று 11ம் தேதி நடைபெறுகிறது.
மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் புதுார் குறிஞ்சி நகரில் புதிதாக வலம்புரி விநாயகர், முருகன், குறிஞ்சீஸ்வரர், குறிஞ்சி அம்மன், முல்லைக்கொடி முனீஸ்வரர் ஆகிய கோவில்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.இக்கோவில் கும்பாபிஷேக விழா, 9ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. ஊர் பொதுமக்கள் தீர்த்தக்குடங்களையும், பெண்கள் முளைப்பாரிகளையும் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்பு முதற்கால வேள்வி பூஜையை துவங்கினர்.நேற்று 10ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜைகளும், பேரொளி வழிபாடும் நடந்தன. இன்று 11ம் தேதி காலை, 7:00 மணிக்கு, 108 திரவியாஹுதி, திருமுறை விண்ணப்பம், ஆகிய நிகழ்ச்சிகளுக்கு பின், 9:15லிருந்து, 10:30 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.
இதே போன்று காரமடை அருகேவுள்ள சின்னதொட்டி பாளையத்தில் கல்யாண ரங்கநாயகி சமேத, கல்யாண ரங்கநாத சுவாமி கோவில், ராமாநுஜர் ஆகிய கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிந்தன. இக்கோவில் கும்பாபிஷேகம் இன்று 11 ம் தேதி காலை, 6:00 லிருந்து, 7:00 மணிக்குள் நடைபெற உள்ளது.