பதிவு செய்த நாள்
11
செப்
2019
02:09
கோவை:நவராத்திரியை முன்னிட்டு, கோவை டவுன்ஹாலில் உள்ள, பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை நிலையத்தில், கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை துவங் கியது; டிச., 12 வரை நடக்கிறது; கலெக்டர் ராஜாமணி துவக்கி வைத்தார்.மேலாளர் நரேந்திபோஸ் கூறியதாவது:மரபாச்சி பொம்மைகள், அத்தி வரதர், அஷ்டலட்சுமி, தசாவதாரம், ராமர் செட், திருமண செட், கடவுள், இயற்கை காட்சிகள், பொய்க்கால் குதிரை செட், கொலு படிகள், பரிசு பொருட்கள், கொலு அலங்கார பொருட்கள் கிடைக்கும்.கொலு அலங்கரிக்க தேவையான பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன; 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கிரெடிட் கார்டுகளும், சேவை கட்டணம் இன்றி ஏற்றுக்கொள்ளப் படும். ரூ.55 லட்சத்துக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.