பதிவு செய்த நாள்
11
செப்
2019
02:09
சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அடுத்த வள்ளலார் நகரில் உள்ள இட்டசித்தி லிங்கேஸ் வரர், பழக்கமுடையார், முத்தாலம்மன், தண்டாயுதபாணி கோவில்களின் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
இதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் (செப்., 9ல்) காலை 8.00 மணிக்கு துவங்கி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் வாஸ்து சாந்தி நடந்தது.
காலை 10.00 மணிக்கு பிரவேசபலி, தீர்த்தசங்கிரஹணம், அக்னி கிரஹணம், மிருத்சங்கிரஹ ணம், 11.30 மணிக்கு பூர்வாங்க பூஜை மஹா தீபாராதனை நடந்தது. நேற்று 10ல் காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், 8.30 மணிக்கு 108 திரவிய ஹோமங்களும், மகா பூர்ணா ஹூதி, தீபாராதனை நடந்தது.காலை 9.30 மணிக்கு தத்துவார்ச்சணை, நாமகர்ணம், காலை 10.00 மணிக்கு கடம் புறப்பாடாகி தண்டாயுதபாணி சாமி கலச கும்பாபிஷேகமும், முத்தாலம் மன், இட்டசித்திலிங்கேஸ்வரர் ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபி ஷேகம் நடந்தது.ஏற்பாடுகளை அறப்பணியாளர்கள் குடும்பத்தினர் மற்றும் அறங்காவலர் குடும்பத் தினர் செய்திருந்தனர்.