கடலுார்:சாத்தங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழாவில் அலங்கார தேர்பவனி நடந்தது.
கடலுார் அடுத்த சாத்தங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் திருப்பலி, தேர்பவனி, தேவ நற்கருணை ஆசீர் நடந்தது. கடந்த 8 ம் தேதி, மாலை திருப்பலியை தொடர்ந்து அலங்கார தேர்பவனி நடந்தது. நேற்று முன்தினம் 9ம் தேதி கொடியிறக்கம் நடந்தது.