பதிவு செய்த நாள்
11
செப்
2019
03:09
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில், தமிழ் புலவர், ஒட்டக்கூத்தரின், 829வது குருபூஜை விழா, நேற்று 10ம் தேதி நடந்தது.
விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன் ஆகிய, மூன்று சோழர் கள் காலத்திலும் வாழ்ந்த, தமிழ் புலவர், ஒட்டக்கூத்தர். ’மூவர் உலா, நாலாயிரக் கோவை’ உள்ளிட்ட, பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
திருவாரூர் அருகே, பூந்தோட்டம் என்ற ஊரில், சரஸ்வதி கோவிலை, ஒட்டக்கூத்தர் கட்டி யதாக கூறப்படுகிறது.தஞ்சாவூர், கும்பகோணம் அருகே உள்ள, தாராசுரம் வீரபத்திர சுவாமி யை நோக்கி, ஒட்டக்கூத்தர், ’தக்கயாக பரணி’ பாடியுள்ளார். பின், இக்கோவிலின் பின்புறத் தில், சமாதி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு, ஆண்டுதோறும், ஒட்டக்கூத் தருக்கு குருபூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஒட்டக்கூத்தரின், 829வது குருபூஜை விழா, நேற்று நடந்தது. வீரபத்திர சுவாமிக்கும், ஒட்டக்கூத்தரின் சமாதிக்கும், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.