பதிவு செய்த நாள்
12
செப்
2019
12:09
புதுப்பாக்கம்: புதுப்பாக்கம் கிராமத்தில், பல அம்மன் கோவில்களில், ஆவணி திருவிழா மற்றும் தேரோட்டம், கோலாகலமாக நடந்தன.
காஞ்சிபுரம் அடுத்த, புதுப்பாக்கம் கிராமத்தில், செல்லியம்மன், சாமாத்தம்மன், மாரியம்மன், ஆணையம்மன் ஆகிய அம்மன் கோவில்களில், ஆவணி திருவிழா நடந்தது.குடம் புறப்பாடுவிழாவை முன்னிட்டு, 8ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி மற்றும் குடம் புறப்பாடு நடந்தது.கூழ் வார்த்தல்நேற்று முன்தினம் காலை, காப்பு கட்டிய பக்தர்கள், தேங்காய் உருட்டினர். பகல், 1:00 மணிக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை, அலகு குத்தும் நிகழ்ச்சியும் நடந்தன.இரவு, 10:00 மணிக்கு, அம்மன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, தேரில் வீதியுலா வந்தார். புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர்.