பதிவு செய்த நாள்
14
செப்
2019
02:09
கடலுார்: பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவிலில், 108 சங்காபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கடலுார், செல்லங்குப்பம் உப்பனாற்றங்கரை அருகே அமைந்துள்ள பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவிலின் 16ம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு, நேற்று 108 சங்காபிஷேகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, அனுக்ஞை, கணபதி பூஜை, பூர்வாங்க பூஜை, 108 சங்கு பூஜை, பூர்ணாஹூதியை தொடர்ந்து பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவருக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சீர் வரிசை ஊர்வலம், மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு, பூப்பந்தாட்டத்தை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின்னர் மணக்கோலத்தில் பூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் வீதியுலா நடைபெற்றது.