பதிவு செய்த நாள்
16
செப்
2019
12:09
உடுமலை: உடுமலை, மேல் மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் நடந்த கஞ்சிக்கலய ஊர்வலத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.உடுமலை, மேல் மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின், ஆடிப்பூர கஞ்சிக்கலய பெருவிழா, கடந்த, 13ம் தேதி துவங்கியது.
முதல் நாளில், விழாவின் துவக்கமாக, கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது.கஞ்சிக் கலயம் எடுக்கும் பக்தர்கள் விரதமிருந்து, வேள்வியில் பங்கேற்றனர். நேற்றுமுன்தினம் மாலையில், பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து வழிபட்டனர்.நேற்று, வேண்டுதல்களை நிறைவேற்ற, பக்தர்கள் கஞ்சிக்கலயம் எடுத்து வந்தனர். நேற்று, காலை, 10:30 மணிக்கு, சிறப்பு பூஜைகளுடன் கஞ்சிக்கலய ஊர்வலம் மாரியம்மன் கோவிலில் துவங்கியது.விஸ்வ ஹிந்துபரிஷத் மாவட்ட பொதுச்செயலாளர் கணஷே்குமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சுப்ரமணியம், ரத்னவேல் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். மாரியம்மன் கோவிலில் துவங்கி, தளி ரோடு, நேரு வீதி வழியாக, பகல், 12:00 மணிக்கு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்துக்கு வந்தடைந்தனர். ஊர்வலத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். நிறைவு பூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.