காரைக்கால் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2019 03:09
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட திருமலைராயன் பட்டினம், ரங்கநாத பெருமாள், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தானம் உட்பட்ட பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது. இக்கோவில் கடந்த 232 ஆண்டுகள் மிகப் பழமை வாய்ந்த பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் திருப்பணிகள் முடிந்து மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 14ம் தேதி நவக்கிரஹ ஹோமம். தன்வந்தரி ஹோமம் மற்றும் முதல் கால யாகசாலை துவங்கியது. இன்று யாகசாலை முடிந்து மூல மந்திரத்துடன் மகா பூர்ணாஹீதியுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.
பின் பட்டாச்சாரியார் ராஜகோபுரம் விமானங்கள் உள்ளிட்ட அனைத்து விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் காலை 10 மணிக்கு புனித நீர் கொண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் மூலவர் பெருமாளுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. மகா கும்பாபிஷேகத்தில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், தொகுதி எம்.எல்.ஏ.கீதா ஆனந்தன் கலெக்டர் விக்ரந்தராஜா புதுச்சேரி இந்து சமய ஆணையர் சச்சிதானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோவில் தனி அதிகாரி ரேவதி கும்பாபிஷேகம் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பு மரியாதை செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும் முக்கிய இடங்களில் பொதுமக்கள் நலன் கருதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.