நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கும்பாபிஷேக ஆண்டு விழாவை, முன்னிட்டு 108 சங்கு அபிஷேகம் மற்றும் வசோத்ரா யாகம் நடந்தது. விழாவை முன்னிட்டு, 13ம் தேதி, காலை 10:00 மணிக்கு, 108 சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ேஹாம வேள்விகள் நடந்தது. 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. பகல் 12:30 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு 108 சங்கு அபிஷேகம் நடந்தது.1:00 மணிக்கு வேள்வியில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 1:30 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.