விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2019 02:09
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே வி.எஸ். அடைக்கலாபுரத்தில் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் (செப்., 15ல்), முதல் கால யாக சாலை பூஜை மற்றும் கணபதி ஹோமம் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (செப்., 16ல்) காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையுடன், சிவபூஜை, நாடி சந்தனம் பூர்ணாஹுதி யாத்ரா தானம் பூஜை நடந்து யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடாகி காலை 10:15 மணிக்கு மாரியம்மன் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
யாகசாலை பூஜை மற்றும் வேள்விகளை விக்கிரவாண்டி சந்திரசேகர குருக்கள் தலைமை யில் சரவணன் குருக்கள் நடராஜன் குருக்கள் செய்திருந்தனர். சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானேர் தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.