ஆந்திராவில் கடப்பா மாவட்டத்திலுள்ள தளபாகம் என்னும் கிராமத்தில் 600 ஆண்டுக்கு முன் வாழ்ந்தவர் அன்னமாச்சாரியார். இவர் தன் 16வயது முதல் 80 ஆண்டு வரை திருப்பதி ஏழுமலையான் முன்னிலையில் 32,000 பாடல்களைப் பாடினார். இப்பாடல்கள் செப்பு தகட்டில் பொறிக்கப்பட்டு கோயிலில் பாதுகாக்கப்படுகிறது.