புரட்டாசியைக் ’கன்னி மாதம்’ என்பர். காரணம் சூரியன் கன்னி ராசியில் இருக்கும் மாதம் இது. இந்த ராசியின் நாதனான புதனுக்கு உரிய தெய்வம் மகாவிஷ்ணு. அவரது அருள் பெற பக்தர்கள் புரட்டாசி விரதம் மேற்கொள்வர். குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் அவதரித்த நாள் புரட்டாசி திருவோணம் என்பதால் புரட்டாசி சனியன்று விரதம் இருப்பர். முன்னோர் வழிபாட்டுக்கு உரிய மகாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்து வழிபடுவர். அம்மன் வழிபாட்டுக்கு உரிய நவராத்திரி நடப்பதும் இந்த மாதத்தில் தான்.