நடராஜருக்கு ஆண்டில் ஆறு நாள் அபிஷேகம் நடக்கும். இதில் புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியும் ஒன்று. இது தவிர சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, ஆவணி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி நாட்களில் அபிஷேகம் நடக்கும். இதை ’ நடராஜர் திருமஞ்சனம்’ என்பர். இந்நாளில் நடராஜர், - சிவகாமியம்மன் பவனி நடக்கும்.