மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிஷேகம் துவங்கியது.
மடத்துக்குளம் தாலுகா கொழுமத்தில் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவில், பல நுாறு ஆண்டுகள், பழமை வாய்ந்தது. 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபடும் கோவிலாக இது உள்ளது. பல ஆண்டுகளுக்கு பின்பு, நேற்றுமுன்தினம் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 48 நாள் மண்டலபூஜை தொடங்கியது. இதோடு இங்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகளும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.