பதிவு செய்த நாள்
18
செப்
2019
12:09
சென்னை: அம்பத்துார், லெனின் நகர், சின்ன திருப்பதியில், பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில், வைணவ, சைவ ஆசாரியர்கள் வருகை தந்து சிறப்பித்து உள்ளனர். இக்கோவிலில்,புரட்டாசி முதல் நாளான இன்று காலை, 5:45 மணிக்கு, சுப்ரபாதம், 6:30 மணிக்கு கோ பூஜை, பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. காலை, 7:00 மணி முதல், தோமாலை சேவை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது.
காலை, 9:30 மணிக்கு, மகா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்குதல், அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. அக்., 17ம் தேதி வரை நடத்தப்படும் புரட்டாசி விழாவில், கோ- பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், கோவிந்த நாம சங்கீர்த்தனம், சதகலச திருமஞ்சனம், சிறப்பு அலங்கார ஆராதனைகள், அன்னதானம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.புரட்டாசி சனிக்கிழமைகளான, 21ம் தேதி, தங்கக்கவச அலங்கார தரிசனம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, பகவான் நாம பிரச்சார சாரிடபுள் டிரஸ்ட், பக்த ஜன சபா டிரஸ்ட், ஸ்ரீ சக்தி மண்டலி ஆகியோர் செய்துள்ளனர். மேலும் தகவல்களுக்கு, ஆலய நிர்வாகி, திருநாவுக்கரசுவை, 93812 12120 என்றஎண்ணில் தொடர்பு கொள்ளலாம்.