பதிவு செய்த நாள்
18
செப்
2019
02:09
மேலுார் : மேலுார் அருகே வெள்ளலுாரில் ஏழை காத்தம்மன் கோயில் திருவிழாவை முன் னிட்டு அம்மனாக ஏழு சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
வெள்ளலுார், உறங்கான்பட்டி, அம்பலகாரன்பட்டி, குறிச்சிப்பட்டி மற்றும் மலம்பட்டி உள்ளி ட்ட 60 கிராமங்கள் சேர்ந்தது வெள்ளலுார் நாடு.
இங்கு முக்கிய திருவிழாவாக ஏழை காத்தம்மன் கோயில் திருவிழா புரட்டாசிதோறும் நடக்கும். இந்தாண்டு இவ்விழாவையொட்டி அம்மனாகபாவிக்கப்பட ஏழு சிறுமிகள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி வெள்ளலுார் குடியிருப்பு கோயில் முன் நேற்று 17ல், நடந்தது. மேலவளசை பூஜாரி சின்னதம்பி 7 பிரிவுகளை சேர்ந்த சிறுமிகளை தேர்வு செய்தார். அக்., 1 திருவிழா முடியும் வரை மக்கள் கடும் விரதம் இருப்பர்.
அக்., 1ல் கோயில் வீட்டில் இருந்து 8 கி.மீ., துாரத்திலுள்ள கோயில்பட்டி ஏழை காத்தம்மன் கோயிலுக்கு அம்பலகாரர்கள் தலைமையில் தேர்வு செய்யப்பட்ட 7 சிறுமிகள் நடந்து செல்வர்.
அவர்களை தொடர்ந்து பெண்கள் தென்னங்குருத்தால் ஆன மதுக்கலயம் ஏந்தியும், நோய் நொடியின்றி வாழ வேண்டி உடலில் வைக்கோல் பிரி சுற்றியும், குழந்தை வரம் வேண்டி பதுமைகளை சுமந்தும் நேர்த்திக் கடன் செலுத்துவர். இதை தொடர்ந்து அக்., 2 தேரோட்டம், 3ல் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறும்.