Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாக்கு அணிந்து பக்தர்கள் வினோத ... மயிலை வீதியை அலங்கரிக்கும் கொலு பொம்மைகள் மயிலை வீதியை அலங்கரிக்கும் கொலு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி சனி: பெருமாள் கோவில்களில் சிறப்பு ஏற்பாடு
எழுத்தின் அளவு:
புரட்டாசி சனி: பெருமாள் கோவில்களில் சிறப்பு ஏற்பாடு

பதிவு செய்த நாள்

20 செப்
2019
11:09

திருப்பூர்: புரட்டாசி சனிக்கிழமையை உற்சவ விழாவுக்கான ஏற்பாடுகள், திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் செய்யப்பட்டுள்ளது.புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், பெருமாள் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

நாளை முதல் புரட்டாசி சனிக்கிழமை என்பதால், கோவில்களில், சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வழிபாடு நடத்துவர். அதற்காக, பக்தர்கள் வரிசையில் செல்வதற்காக, தடுப்பு வரிசை அமைக்கப்பட்டுள்ளது.அதிகாலையில், ஸ்ரீதேவி பூமிதேவி தாயார் சமதே வீரராகவப்பெருமாளுக்கு, மகா திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடக்கும். அடுத்தாக, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.தொடர்ந்து, கோவில் கொடிமரம் அருகே, கருட வாகனத்துடன் பக்தர்களுக்கு சேவைசாதிக்க இருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்வர் என்பதால், 50 ரூபாய் சிறப்பு ’டிக்கெட்’ வரிசையும், பொதுதரிசன வரிசையும் அமைக்கப்பட்டுள்ளது.ஒரே நேரத்தில், 1,200 பக்தர்கள் வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்யவும், விரதம் இருக்கும் பக்தர்களுக்கு, அன்ன பிரசாதம் வழங்கவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவிநாசி அருகே மொண்டிபாளையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில், தாளக்கரை ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும், புரட்டாசி சனிக்கிழமை நாளில், பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 
temple news
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar