பதிவு செய்த நாள்
23
செப்
2019
12:09
திருவொற்றியூர்: காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத, முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, உற்சவருக்கு, 18 கிலோவில், முந்திரி மாலை அணிவிக்கப்பட்டது.
திருவொற்றியூர், காலடிப்பேட்டை - கல்யாண வரதராஜ பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், உற்சவர் விசேஷ அலங்காரங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.நேற்று முன்தினம், புரட்டாசி மாதம், முதல் சனிக்கிழமையை ஒட்டி, உற்சவர், ஸ்ரீதேவி - பூதேவி உடன், பவள வண்ண பெருமாளுக்கு, 18 கிலோ அளவிலான, முந்திரி மாலை அணிவிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.மூலவர், கல்யாண வரதர் முத்தங்கி சேவையிலும், பெருந்தேவி தாயார் முந்திரி மாலை அலங்காரத்திலும், பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.