மதுரை : மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் ’செம்பியன் மாதேவி’ நுால் வெளியீட்டு விழா நடந்தது.
தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., பேசியதாவது: செம்பியன் மாதேவி குறித்து பல நுால்கள் இருப்பி னும் ஆய்வு மையம் சார்பில் வெளியானது சிறப்பு. சேவைகளில் ஈடுபட்ட அரசு குடும்ப பெண்க ளில் சோழ பேரரசில் பிறந்த மாதேவி சிவநெறி தொண்டராக இருந்தார். இவர், ஐந்து சோழ பேரரசுகளை கண்டவர். 2011ல் தஞ்சை பெரிய கோயிலில் கண்காட்சியில் மாதேவி காலத்து மரக்கால் ஒன்றை காட்சிக்கு வைத்தோம். இது போன்ற வரலாற்று நிகழ்வுகள், கோயில் கட்டட கலைகள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும், என்றார். தமிழ் பல்கலை முன்னாள் துணை வேந்தர் திருமலை, ஜெர்மனி தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் சுபாஷினி, தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் இயக்குனர் பசும்பொன், ஆய்வு மைய செயலாளர் சாந்தலிங்கம் பங்கேற்றனர். தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.