* பொறுமை என்னும் நற்குணம் உள்ளவரை விட்டு பெருமை விலகுவதில்லை. * பூமி போல பொறுமையுடன் இரு. * உயிர் இருப்பதன் அடையாளமே பிறர் மீது அன்பு செலுத்துவது தான். * பிறருக்கு நல்லதை மட்டும் செய். அனைவரிடமும் இனிமையாகப் பேசு. * உயிரை விட மேலானதாக ஒழுக்கத்தை போற்று. * தர்ம வழியில் நடப்பவனும், பிறருக்கு தீங்கு நினைக்காதவனும் திருமகள் அருளை பெறுவர். * மறந்தும் கூட பிறருக்கு கேடு நினைக்காதே. * இரக்கம் இல்லாதவன் வானுலகில் வாழ முடியாது. * பிறருக்கு சொந்தமான பொருளை திருட நினைத்தாலும் கூட தீமை உண்டாகும். * மனதை உண்மை ஒன்றே தூய்மைப்படுத்தும். * தீங்கு செய்யத் தூண்டும் எண்ணம், கோபத்தால் தான் உண்டாகிறது. * தனக்கு துன்பம் வரக் கூடாது என்று விரும்புபவன், பிறருக்கு துன்பம் செய்யாமல் இருக்க வேண்டும். * கொலை செய்யத் துணிந்தவனிடம் எல்லா பாவச் செயல்களும் குடியிருக்கும். * ஆசையை ஒழித்தால் மட்டுமே துன்பம் இல்லாத நிலையை அடையலாம். * அழியாத செல்வம் கல்வி மட்டுமே. மற்ற செல்வங்கள் ஓரிடத்தில் தங்கியிருப்பதில்லை. * கேடில்லாத செல்வம் கல்விச் செல்வம். ஏழு பிறவிக்கும் நமக்கு துணையாக வரும். * செய்த நன்றியை மறக்க கூடாது. அதற்கு பிராயச்சித்தம் கிடையாது. * பயனில்லாத சொற்களை மறந்தும் பேசக்கூடாது. * கடும் சொற்களை பேசுவது, பழம் இருக்க காய்களை உண்பது போலாகும். * மனிதன் பிறந்தால் பூமியில் புகழுடன் வாழ வேண்டும். * நழுவிய ஆடையை இறுக்கி கட்டும் கை போல, ஆபத்தில் உதவுபவனே நண்பன். - சொல்கிறார் திருவள்ளுவர்