நாகர்கோவில்: கன்னியாகுமரியில் திருப்பதி தேஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி கோயில் கட்டப்பட்டு ஜன., 27-ல் கும்பாபி ஷேகம் நடந்தது. தினமும் காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடை திறந்திருக்கும். ஏராளமான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்கின்றனர். தற்போது இரண்டு வாசல்களில் மெட்டல் டிடெக்டர் அமைக்கப்பட்டுள்ளது. அலைபேசிகள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.