நவராத்திரி ஐந்தாம் நாளான இன்று அம்பிகையை அமுதகலசம் தாங்கிய கோலத்தில் மோகினியாக அலங்கரிக்க வேண்டும். ஆறு வயது சிறுமியை வைஷ்ணவியாகக் கருதி வணங்க வேண்டும். பூஜையறையில் கடலை மாவு கோலமிட வேண்டும். கதம்பம், மரிக்கொழுந்து மாலைகளை அம்பிகைக்கு சூட்ட வேண்டும். பால்சாதம், கடலைப்பருப்பு சுண்டல் (பூம்பருப்பு), பாயாசம், சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் எண்ணியதெல்லாம் விரைவில் நிறைவேறும். திட்டங்களில் வெற்றி கிடைக்கும்.
பாட வேண்டிய பாடல்: ஆளுகைக்கு உன்றன் அடித்தாமரைகள் உண்டு அந்தகன்பால் மீளுகைக்கு உன்றன் விழியின் கடையுண்டு மேல் இவற்றின் மூளுகைக்கு என்குறை நின்குறையே அன்று முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே