சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* உலகாளும் நாயகியே!ஆனைமுகத்தானின் அன்னையே!வேதம் போற்றும் வித்தகியே!ஞானச்சுடர்க்கொடியே!மரகதமயிலே! குளிர்ந்த நிலவாகபிரகாசிப்பவளே! கருணைமழையைப் பொழிபவளே!ஈசனின் திருக்கரம் பிடித்தவளே!வெற்றித் திருநாளான விஜயதசமிநன்னாளான இன்று எங்களின்முயற்சிகளில் வெற்றியைத்தந்தருள வேண்டும்.* மங்களம் நிறைந்தவளே!கற்பகம் போல் வாரிவழங்கும் ஈஸ்வரியே!பர்வத ராஜனின் மகளே!அபிராம வல்லியே!ஆனந்தம் அளிப்பவளே!ஆதிபராசக்தியே! அங்கயற்கண்ணியே!திருமாலின் சகோதரியே!மலர் அம்பும், கரும்பு வில்லும் தாங்கியவளே!ஈசனின் இடப்பாகத்தில் உறைபவளே!எங்களின் குடும்பத்தில்சுபிட்சத்தை அளித்தருள வேண்டும்.* நாராயணியே! சாம்பவியே!சங்கரியே! சியாமளையே!மாலினியே! திரிசூலம் ஏந்தியசூலினியே! புவனேஸ்வரியே!மதங்க முனிவரின் மகளே!பிரபஞ்சத்தைப் படைத்துக் காப்பவளே!வேதம் போற்றும் வித்தகியே!வீரத்தின் இருப்பிடமே!எங்களின் மீது உன்கடைக்கண்களை காட்டியருள்வாயாக.* மதுரையில் வாழும் மீனாட்சியே!காஞ்சியை ஆளும் காமாட்சியே!காசியில் உறையும் விசாலாட்சியே!மலையரசனின் புத்திரியே!மகிஷாசுரனை வதம் செய்துதர்மத்தை நிலைநாட்டியவளே!திக்கற்றவருக்கு துணையாக வருபவளே!வெற்றியருளும் விஜய துர்கையே!உலக உயிர்கள் எல்லாம்நலமோடு வாழ அருள்புரிய வேண்டும்.