Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நலம் தரும் நவராத்திரி பாட்டு காஞ்சிப்பெரியவர் உபதேசங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வெற்றி அருள்வாய் விஜயதுர்கையே...!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2019
04:10

மகிஷாசுரனை அம்பிகை வென்றநாள் விஜயதசமி. இன்று அம்மனின் முன் அமர்ந்து இந்த வழிபாட்டைப் படித்தால் நினைத்தது நிறைவேறும்.


* உலகாளும் நாயகியே!
ஆனைமுகத்தானின் அன்னையே!
வேதம் போற்றும் வித்தகியே!
ஞானச்சுடர்க்கொடியே!
மரகதமயிலே! குளிர்ந்த நிலவாக
பிரகாசிப்பவளே! கருணை
மழையைப் பொழிபவளே!
ஈசனின் திருக்கரம் பிடித்தவளே!
வெற்றித் திருநாளான விஜயதசமி
நன்னாளான இன்று எங்களின்
முயற்சிகளில் வெற்றியைத்
தந்தருள வேண்டும்.

* மங்களம் நிறைந்தவளே!
கற்பகம் போல் வாரி
வழங்கும் ஈஸ்வரியே!
பர்வத ராஜனின் மகளே!
அபிராம வல்லியே!
ஆனந்தம் அளிப்பவளே!
ஆதிபராசக்தியே! அங்கயற்கண்ணியே!
திருமாலின் சகோதரியே!
மலர் அம்பும், கரும்பு வில்லும் தாங்கியவளே!
ஈசனின் இடப்பாகத்தில் உறைபவளே!
எங்களின் குடும்பத்தில்
சுபிட்சத்தை அளித்தருள வேண்டும்.

* நாராயணியே! சாம்பவியே!
சங்கரியே! சியாமளையே!
மாலினியே! திரிசூலம் ஏந்திய
சூலினியே! புவனேஸ்வரியே!
மதங்க முனிவரின் மகளே!
பிரபஞ்சத்தைப் படைத்துக் காப்பவளே!
வேதம் போற்றும் வித்தகியே!
வீரத்தின் இருப்பிடமே!
எங்களின் மீது உன்
கடைக்கண்களை காட்டியருள்வாயாக.

* மதுரையில் வாழும் மீனாட்சியே!
காஞ்சியை ஆளும் காமாட்சியே!
காசியில் உறையும் விசாலாட்சியே!
மலையரசனின் புத்திரியே!
மகிஷாசுரனை வதம் செய்து
தர்மத்தை நிலைநாட்டியவளே!
திக்கற்றவருக்கு துணையாக வருபவளே!
வெற்றியருளும் விஜய துர்கையே!
உலக உயிர்கள் எல்லாம்

நலமோடு வாழ அருள்புரிய வேண்டும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar