ஒருமுறை தைலம் ஷர்ரி என்பவர், ”இறைத்தூதரே! நாங்கள் குளிர் பிரதேசத்தில் வசிப்பவர்கள். குளிரைப் போக்க மது அருந்துகிறோம்” என்றார். ”அந்த மதுவில் போதைப்பொருள் இருக்கிறதா?” எனக் கேட்டார் நாயகம். ”ஆம்” என்ற தோழரிடம், ”அப்படியானால் மது குடிக்காதீர்கள். குடிப்பவர்களை நல்வழிப்படுத்த முயலுங்கள். இல்லாவிட்டால் போரிடுங்கள். ஏனெனில் மது அருந்தும் எண்ணமே எல்லா பாவங்களுக்கும் தாயாகும். இந்த பழக்கம் கொண்டவன் தொழுகையை கைவிடுவான்’ என்றார்.