ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவ ஒன்பதாம் நாள் செப்புதேரோட்டம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 6:36 மணிக்கு பெரிய பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூமா தேவி செப்புதேருக்கு எழுந்தருளினர். அங்கு ஹரீஸ்பட்டர் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் காலை 7:05 மணிக்கு கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், சுதர்சன் பட்டர், மாதவன், மணியம் ஸ்ரீராம், ஸ்தானிகம் கிருஷ்ணன் மற்றும் கோயில் பட்டர்கள் பங்கேற்றனர்.