குலசேகரன்பட்டினம்: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மகிஷா சூரசம்ஹாரம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியின் நேற்று ( செவ்வாய்க்கிழமை ) இரவு மகிஷா சூரசம்ஹாரம் இரவு 12 மணிக்கு துவங்கி விடிய விடிய நடந்தது. அப்போது அம்மன், காளி , சிவன், உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து பக்தர்கள் வீதி உலா வந்தனர்.விழாவில் பங்கேற்க நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.