பதிவு செய்த நாள்
09
அக்
2019
12:10
திருத்தணி: வன துர்க்கையம்மன் கோவிலில், நேற்று நடந்த தீ மிதி திருவிழாவில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி தீ மிதித்தனர். திருத்தணி நகராட்சியில் உள்ள மடம் கிராமத்தில், வன துர்க்கையம்மன் கோவிலில், நவராத்திரி விழா, கடந்த மாதம், 29ம் தேதி துவங்கியது.தினமும், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான நேற்று, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி மற்றும் திரளான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.மாலை, 6:30 மணிக்கு, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி அக்னி குண்டத்தில் இறங்கி, தீ மிதித்தனர்.தொடர்ந்து உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு, அருள்பாலித்தார்.