புதுச்சேரி பாலா திரிபுரசுந்தரி கோவிலில் மகா சாந்தி அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2019 04:10
புதுச்சேரி:பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், மகா சாந்தி அபிஷேக பெருவிழா இன்று 9ல் நடக்கிறது.
புதுச்சேரி அடுத்த இரும்பை டோல்கேட் அருகில், பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந் துள்ளது. இங்கு, நவராத்திரி விழா, கடந்த 29ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.விழாவின் நிறை வாக, பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு மகா சாந்தி அபிஷேக பெருவிழா, இன்று 9ல் மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து, அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்படுகிறது.விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.