சிவனை‘நமசிவாய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தால் வணங்குகிறோம். அதுபோல, அம்பாளுக்கும் ‘துர்க்கா’ என்னும் சொல் பஞ்சாட்சரமாக (ஐந்தெழுத்து மந்திரம்) விளங்குகிறது.த், உ,ர்,க்,ஆ ஆகிய ஐந்து எழுத்துகளின் சேர்க்கையே துர்க்கை. துர்க்கா என்ற மந்திரத்தை ஜெபித்தால், எதிரிகளின் தொல்லை நீங்கி மன தைரியம் உண்டாகும். இந்த சொல்லுக்கு ‘அரண்’ ‘கோட்டை’ என்று பொருள். வழிபடும் அடியவர்களைக் கோட்டை போலச் சுற்றி பாதுகாக்கும் துர்கையை ‘ துர்க்கா தேவீம் சரணம் ப்ரபத்யே’ என்று வேதம் போற்றுகிறது.