பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜபெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பண்ருட்டி ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜபெருமாள் கோவிலில் திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை 7 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 9 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், 10 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக கல்யாண பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:30 மணிக்கு மாங்கல்ய பூஜை, திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.