பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில், பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணத்தை முன்னிட்டு உற்சவருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர்,பஞ்சாமிர்தம் உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது. அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. மாலையில் உற்சவர் வரதராஜப்பெருமாள், கருடவாகனத்தில் தெற்குஅக்ரஹாரம், வடக்கு அக்ரஹாரம் உட்பட முக்கிய வீதிகளில் உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து தரிசித்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் கண்ணன், பாபு செய்தனர்.